Thamarai Poovukum Song Lyrics In Tamil | Tamil2day
பாடகர்கள் : சுஜாதா மோகன் மற்றும் கிருஷ்ணச்சந்திரன்
பாடலாசிரியர் :வைரமுத்து
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
திரைப்படம் : பசும்பொன்
ஆண் : தாமரைப் பூவுக்கும்
தண்ணிக்கும் என்னைக்கும்
சண்டையே வந்ததில்ல
மாமன அள்ளி நீ
தாவணி போட்டுக்க
மச்சினி யாரும் இல்ல
பெண் : கம்பங்கூழில் போட்ட உப்பு
கஞ்சி எல்லாம் சேர்தல் போல
கண்டபோதே இந்த மூஞ்சி
நெறஞ்சுப் போச்சு நெஞ்சுக்குள்ள
ஆண் : நாக்குல மூக்கையே
ஏ யெஹ் தொட்டவன் நானடி
பார்வையால் உசுரையே
ஓகோ தொட்டவ நீயடி
பெண் : தாமரைப் பூவுக்கும்
தண்ணிக்கும் என்னைக்கும்
சண்டையே வந்ததில்ல
ஆண் : மாமன அள்ளி நீ
தாவணி போட்டுக்க
மச்சினி யாரும் இல்ல
ஆண் : ஐயாறெட்டு நெல்லைப் போல
அவசரமா சமஞ்ச
அயித்த மக பஞ்சதுக்கு
ஆதரமா அமஞ்ச
பெண் : குட்டிபோட்ட பூனைப் போல
காலச் சுத்திக் கொழஞ்ச
பாவமென்னு நீவி விட்டா
கல்லுப் போட துணிஞ்ச
ஆண் : சொந்தக்காரன் நான்தானே
தொட்டுப் பாக்கக் கூடாதா
பெண் : கன்னம்தொடும் கை ரெண்டும்
கீழேக் கொஞ்சம் நீளாதா
ஆண் : இந்த நாட்டில் தீண்டமைதான்
இன்னும் உள்ளதா
பெண் : வயசுக்கு வந்தப் பூ
ஒகோ ஆசையே பேசுமா
வண்டுக்கும் பூவுக்கும்
ஒகோ சண்டையா சத்தமா
ஆண் : தாமரைப் பூவுக்கும்
தண்ணிக்கும் என்னைக்கும்
சண்டையே வந்ததில்ல
பெண் : மாமன அள்ளி நான்
தாவணி போட்டுக்க
மாலையும் சூடவில்ல
பெண் : கம்மாக்குள்ள ஒத்த மரம்
அங்கே போவோம் மாமா
கம்மாத்தண்ணி வத்தும்போது
திரும்பிறுவோம் மாமா
ஆண் : நீச்சல் எல்லாம் சொல்லித் தாரேன்
நீயும் கொஞ்சம் வாமா
அங்கே இங்கே கையிப்படும்
சொல்லிபுட்டேன் ஆமா
பெண் : நிலாக் கறையை அழிச்சாலும்
உன்னைத் திருத்த முடியாது
ஆண் : பொரட்டிப்போட்டு அடிக்காம
ஆமை ஓடு ஒடையாது
பெண் : போகப் போக மாமனுக்கு
புத்தி மாறுது
ஆண் : கிள்ளவா அள்ளவா
ஓகோ சொல்லடி செய்யலாம்
வேட்டியா சேலையா
ஒகோ பட்டிமன்றம் வைக்கலாம்
பெண் : தாமரைப் பூவுக்கும்
தண்ணிக்கும் என்னைக்கும்
சண்டையே வந்ததில்ல
ஆண் : மாமன அள்ளி நீ
தாவணி போட்டுக்க
மச்சினி யாரும் இல்ல
பெண் : கம்பங்கூழில் போட்ட உப்பு
கஞ்சி எல்லாம் சேர்தல் போல
ஆண் : கண்டபோதே இந்த மூஞ்சி
நெறஞ்சுப் போச்சு நெஞ்சுக்குள்ள
பெண் : மாமனே மாமனே
ஒகோ ஓங்கிட்ட ஒட்டவா
பூமிக்கும் வேருக்கும்
ஓகோ சண்டையா சத்தமா